மணாவின் பக்கங்கள்

என் மீது எப்படி வழக்கு வர முடியும்?

பரண் :  கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’ பதில் : “எப்படி வரமுடியும்? நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சொத்து வந்த வழியைக் காட்ட முடியாமல் ஏதாவது சொத்து சேர்த்திருக்கிறோமா? என்னுடைய வருமான வரிக் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றன. முறையாக வருமான வரி கட்டி வந்திருக்கிறேன். நான் எவ்வளவு […]

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் மணா எழுதிய தமிழகத் தடங்கள் நூலிருந்து ஒரு மீள் பதிவு. “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”- வள்ளலார். சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது அந்த வீடு. ஒண்டிக் குடித்தனங்கள் நிறைந்த வீட்டின் மாடியில் வாழ்ந்திருக்கிறார் வள்ளலாரான இராமலிங்க அடிகள். உள்ளே போனதும் எளிமையான ஹால். ஓரத்தில் வெளிச்சம் அணுகாத ஓா் அறை. அதில் விளக்கு ஒளிர்கிறது. வள்ளலாா் 32 ஆண்டுகள் […]

கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாளன்று!

2001 ஜூன் மாதம் 30 ஆம் தேதி. கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் கலைஞர். அன்றைய தினம் காலையில் தான் சன் டிவி செய்தியாளரை அரசு நடத்திய வித‍த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதான எண்பது பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். கைது செய்யப்பட்டு சேப்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எங்களைப் பார்க்க வந்திருந்தார் கலைஞர். அன்றிரவே அவர் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல் வந்ததும், மாலையில் விடுவிக்கப்பட்ட நான் கலைஞரின் […]

மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு!

பரண்: ஜனங்களே! நீங்கள் தான் இந்தப் பூமிக்கு சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள். ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்காவிட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு. உங்களுடைய சுதந்திரங்களையும் உரிமைகளையும் அறிந்து கொண்டு சட்டத்திற்கிணங்கிய காரியங்களிலே தலையிடுவோர்களை சிறிதேனும் தாட்சண்யமின்றி எவ்விதங்களாலும் அடக்கி விடுங்கள். மனத் துணிவுடையவர்களிடம் போலீஸாரின் குறும்பு செல்லமாட்டாது. மனத்துணிவுடையவர்களை பிசாசுகூட அணுகாது. – 1907 மே மாதம் 4-ம் தேதியன்று பாரதியார் எழுதியது.

50 நாடுகளுக்குச் சென்ற 10 வயது சிறுமி!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. அந்த சிறுமி குறித்த ஒரு பதிவு இந்தியாவை பூர்விகமாக உடையவர் தீபக். இவரது மனைவி அவிலாஷா. இவர்கள் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் தணிக்கையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் அதிதிக்கு பத்து வயதாகிறது. தங்கள் மகளுக்கு பல்வேறு நாடுகள் பற்றிய […]

அரசைப் பலப்படுத்த குடிமகன்களை ஏன் பாடாய்ப் படுத்துகிறார்கள்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : பார்க்கும் போது எவருக்குமே பதற்றம் கூடுகிறது. டாஸ்மாக் கடைக்கு முன்பு கூடுதலான விலைக்கு ஏன் விற்கிறீர்கள்? – என்று கேள்வி கேட்டதற்காக அந்தக் குடிமகனை காவலர் ஒருவர் சரமாரியாக கன்னத்திலேயே அடிக்கிறார். பக்கத்திலிருந்து மற்ற குடிமகன்கள் முணுமுணுக்கிறார்கள். புலம்புகிறார்கள். ஆதங்கப்படுகிறார்கள். இந்தக் காட்சி பல தொலைக்காட்சிகளில் வெளிவந்து பலரை அதிர வைத்திருக்கிறது. “குடி குடியைக் கெடுக்கும்” என்கிற எச்சரிக்கை வாசகங்களை நினைவுபடுத்தும் அரசு தான், இன்னொரு புறம் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் விற்பனைக்கான […]