புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!
மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. “செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்” என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், “செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம் கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா! என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா” என்பன போன்ற புரட்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார். ஏ – செல் தூக்குக் கொட்டடியின் அருகில் இருக்கிறது. அதில் […]
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்!
தர்மம் தலையை மட்டுமல்ல… ஒரு நாட்டையே காப்பாற்றும். 1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது […]
தாய்மொழி காப்போம் வாருங்கள்!
பிப்ரவரி 21 – சர்வதேசத் தாய்மொழி தினம் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’ என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை. அந்நூல் உரைப்பதை முழுவதுமாக அறியாதபோதும், தாய்மொழியாம் தமிழைப் பெருமைப்படுத்தும் அந்த வார்த்தைகள் மட்டும் நம் நெஞ்சோடு ஒட்டிக் கிடக்கின்றன. ‘ஒருகாலத்தில் தமிழைப் பேசுவதும் எழுதுவதும் படிப்பதும் அனிச்சைச் செயலாக நம் வாழ்வோடு கலந்திருந்தது; இன்று அப்படியில்லை’ – ஒவ்வொரு காலகட்டத்திலும் முற்றிய தலைமுறை தளிர்களை நோக்கி உதிர்க்கும் வார்த்தைகள் இவை. […]
சக மனிதரை மதித்து சமூக நீதி காப்போம்!
பிப்ரவரி 20 – உலக சமூக நீதி தினம் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடலை ‘கருப்புப் பணம்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அறுபதாண்டுகள் ஆன பிறகும் அந்த வரிகளுக்கான தேவை உயிர்ப்போடு இருந்து வருவதை என்னவென்று சொல்வது? அந்த நிலை உருவாக இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று எண்ணுவதா அல்லது அதை நோக்கிய பயணத்திலேயே இத்தனை காலம் உருண்டோடியிருக்கிறது என்பதா? ஒரு சமூகத்தில் எல்லோருக்கும் […]
முரண்பட்ட முகமூடிகள்!
படித்ததில் ரசித்தது: நம்மிடம் நிறைய முகமூடிகள் உள்ளன. நாம் அவற்றை எளிதாக அணிந்து, நம் சொந்த மனம் மற்றும் இதயத்தின் தனியுரிமையில் மட்டுமே அவற்றை கழற்றுகிறோம். நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் – ஒருவர் தீவிரமாக அல்லது விழிப்புடன் கவனித்தால் – பல்வேறு முகமூடிகள் உள்ளன. நண்பர்களுடன், நாம் ஒரு முகமூடியை அணிவோம்; குடும்பத்தின் நெருக்கத்தில் நமக்கு மற்றொரு முகமூடி உள்ளது. நாம் தனியாக இருக்கும்போது – எப்போதாவது தனியாக இருந்தால் – முற்றிலும் மாறுபட்ட முகமூடியைப் அணிகிறோம். […]
உலக வானொலி தினம்: சில நினைவுகள்!
ராஜேந்திரன் அழகப்பன்: ரேடியோ காலமாற்றத்தில் எத்தனையோ வடிவங்களாக மாறிவிட்டது. ஆனால் 70, 80 காலங்களில் ரேடியோதான் உலகம் என்றிருந்தது. அப்போது எல்லாம் ரேடியோ சிலர் வீடுகளில் தான் இருக்கும். கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் இருக்கும், பெரிய சைஸ் மரப்பெட்டி போல் அமைந்திருக்கும். அதற்கும் உரிமம் (லைசன்ஸ்) ரேடியோ பெட்டிக்குள் எண் இருக்கும். அதிகமாக ரேடியோ கேட்பது நரிக்குறவ சமுதாய மக்கள்தான் ரேடியோக்களை தோளில் சுமந்தபடியே கேட்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். திருச்சி வானொலி செய்தி கேட்பார்கள். ஆனால் […]